தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு... 'கங்கா ஸ்நானம்’ எனப்படுகிற எண்ணெய்க் குளியல்.திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். அதிகாலை குளியல் என்பது உடம்புக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும்.
முதல்நாள் இரவே தண்ணீரில் ஆல், அரசு, அத்தி, மற்றும் மாவிலைகளைப் போட்டு வைத்திருந்து, காலையில் அவற்றை அகற்றிவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பொறுக்கிற சூட்டில் வெந்நீர் தயாராகும். அதேபோல், தேய்த்துக் கொள்ளும் நல்லெண்ணையைத் தயார் செய்வதிலும் தனிக்கவனம் உண்டு. இஞ்சித் துண்டு, பூண்டுப் பற்கள், மிளகு, விரலிமஞ்சள், சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறியதும், வீட்டின் மூத்தவர்கள் கையால், எல்லார் தலையிலும் சில சொட்டுகள் வைத்துத் தொடங்கிவைக்க, எண்ணெய் குளியல் உற்சவம் இனிதே ஆரம்பிக்கும்!
முதல்நாள் இரவே தண்ணீரில் ஆல், அரசு, அத்தி, மற்றும் மாவிலைகளைப் போட்டு வைத்திருந்து, காலையில் அவற்றை அகற்றிவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து, பொறுக்கிற சூட்டில் வெந்நீர் தயாராகும். அதேபோல், தேய்த்துக் கொள்ளும் நல்லெண்ணையைத் தயார் செய்வதிலும் தனிக்கவனம் உண்டு. இஞ்சித் துண்டு, பூண்டுப் பற்கள், மிளகு, விரலிமஞ்சள், சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறியதும், வீட்டின் மூத்தவர்கள் கையால், எல்லார் தலையிலும் சில சொட்டுகள் வைத்துத் தொடங்கிவைக்க, எண்ணெய் குளியல் உற்சவம் இனிதே ஆரம்பிக்கும்!