1. பிரசவ வலி ஆரம்பித்த நேரம் . காலையில் எழுப்புகிறேன்
ஏங்க ! எந்திரிங்க , இன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு போகணும். எனக்கு வலி ஆரம்பிச்சிருச்சு
மெல்ல எழுந்து உட்கார்ந்து ....."எங்க அப்பாகிட்டே சொன்னியா ..........."
(ஏங்க உங்க அப்பா வந்து பிரசவம் பார்ப்பாரா எனக்கு )- பின்னே பக்கத்துலே இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போக 50 மைல் தள்ளி இருக்கிற அப்பாவை ஏன் அழைக்க வேண்டும்?
2. பிரசவம் முடிந்து மயக்கம் தெளிகிறேன்
எல்லாரும் என் குழந்தையை பார்த்து ஏதோ சொல்லி கொண்டிருக்கிறார்கள்...
என் மாமியார் தான் "என் (மகள் வயிற்று பெண் )பேத்தியின் நிறம் இவன் வரமாட்டான் போலிருக்கே "
என்னங்கடா உங்க லாஜிக்கு ....அவளுக்கு பிறந்தா அவளை மாதிரி நிறம் இருக்கும்.. இவன் எனக்கு தானே பிறந்திருக்கிறான் ... அப்புறம் எப்படி தான் சிவப்பா பிறப்பான்... அப்படியே இவங்க மகன் சந்தன நிறம் ...இப்போ
பேரனுக்காக வருத்தபடுறாங்க ...போயி பொழப்ப பாருங்கடா...
ஏன்டா இப்போ பிறந்த பையனை சுத்தி நின்னு ஏதேதோ பேசி கடுப்பு ஏத்துரிங்க "
3. அடிக்கடி தொட்டிலில் தூங்குகிற குழந்தையை பார்த்து ..
"எப்படி இருந்தாலும் காது நிறம் தான் வருவான் ...
கொஞ்சம் கருப்பாதான் போயிட்டான்" என்று பெருமூச்சு விடுபவர்களை பார்த்து ..
"கறுப்பா இருந்தா தப்பில்லைங்க பொறுப்பா இல்லேன்னா தான் தப்பு"
4. "நீங்க ஏதும் உங்க பையனுக்கு வாங்கிட்டு வரலையா"....?
"இப்போ வாங்கி கொடுத்தா அவனுக்கு என்ன தெரிய போகுது ?"
யோவ் உங்க நோக்கம் தான் என்ன ? அவன் வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு விளையாட்டு பொருள் ஏதும் வாங்கி தருவதா ? இல்லே வாங்கி தந்தது என்ன பொருள்னு அவனுக்கு தெரியறதா ?
5."ஏங்க நம்ம பையனை பாருங்க . அவனை உங்க கையிலே எடுத்துகோங்க ..."
"சாரி , எனக்கு இதுக்கு முன்னாடி பிறந்த குழந்தையை எடுத்து பழக்கம் இல்லே...வேணுமினா ஒரு மூணு மாசம் கழிச்சு தூக்கிக்கிறேன் "
(ஆமா நாங்க எல்லாம் என்ன மாச கணக்கா ட்ரெயினிங் எடுத்துட்டா வந்தோம்
ஆபரேஷன் முடிஞ்சு மயக்கம் தெளிஞ்ச உடனே எடுத்து கையிலே கொடுத்துறாங்க.நாம சொல்ல முடியுமா... சாரி நர்சம்மா எனக்கு தூக்கி பழக்கம் இல்லே கொஞ்ச நாள் போகட்டுமின்னு )
1 comment:
Mind blowing!!
i have become ur fan
Post a Comment